Posts

எளியோர் வலிகளை நாடகப் படிமமாக்கிய ரத்தன் தியாம் – 1948 – 2025

Image
  ஞா. கோபி, நாடகவியலாளர்.   எளியோர் வலிகளை நாடகப் படிமமாக்கிய ரத்தன் தியாம் – 1948 – 2025     1980 களிலிருந்து இந்திய நாடகத்தை தனது வட்டாரம் சார்ந்த வாழ்வியல் சடங்குகளின் அழகியல் மற்றும் உடல்மொழிகள் மூலம், சமகால படைப்புகளாய் உருவாக்கம் செய்து உலகப் பார்வையாளர்களுக்குக் கொடுத்தவர் நாடக இயக்குநர் ரத்தன் தியாம்.   மணிப்பூரின் கோரஸ் ரெபர்ட்டரி தியேட்டரின் நிறுவனரும் இந்திய நாடகங்களில் தவிர்க்கவே முடியாத படைப்பாளி பத்மஸ்ரீ ரத்தன் தியாம். மணிப்பூர் பழங்குடிகள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறை மற்றும் போருக்கு எதிராக தனது காத்திரமான நாடக மொழிகளைக் கொண்டு, தன் வாழ்நாளின் இறுதிவரைப் போராடிய ரத்தன் தியாமுக்கு, தமிழ் நாடகக் கலைஞர்கள் சார்பில் மனமார்ந்த அஞ்சலி.         23 ஜூலை 2025 அன்று, தனது 77 வது வயதில் மறைந்த தியாமிற்கு, இரங்கல் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,   “தியாம், மணிப்பூர் நாடகத்தை உலக வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்த ஒரு உண்மையான ஜாம்பவான்" என...

உணர்வுகள் நடனமிடும் ரஷித் ஜான்சனின் அரூப ஓவியங்கள் - ஞா. கோபி

Image
    உணர்வுகள் நடனமிடும் ரஷித் ஜான்சனின் அரூப ஓவியங்கள்   "எனது கலை எப்போதும் இனம், போராட்டம், துக்கம் மற்றும் ஒடுக்குமுறைகள் பற்றிய கவலைகளைக் கொண்டுள்ளது. அதே சமயம் கறுப்பு வாழ்வியலின் பாரம்பரியம் மற்றும் நாங்களே உருவாக்கும் வாய்ப்புகளைச் சுற்றியுள்ள மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தையும் மையமாகக் கொண்டுள்ளது" - Rashid Johnson ரஷித் ஜான்சன் தற்கால அமெரிக்க ஓவியர் ஆவார், அவர் கருத்தியல் ரீதியிலாக, கருப்பினத்தவர் வெளிப்படுத்த விரும்பும் கலை பாணியை, தான் உருவாக்க விரும்புவதாகச் சொல்லுகிறார். ஜான்சன் முதன்முதலில் 2001 ஆம் ஆண்டு தனது 24 வயதில், ஹார்லெமில் (Harlem) உள்ள ஸ்டுடியோ அருங்காட்சியகத்தில் தெல்மா கோல்டனால் தொகுக்கப்பட்ட ஃப்ரீஸ்டைல் ஓவியக் கண்காட்சியில் (2001) அவரது படைப்புகள் சேர்க்கப்பட்டபோதுதான் விமர்சனப்பூர்வமான கவனத்தைப் பெற்றார். ஜான்சன் சிகாகோவின் கொலம்பியா கல்லூரி மற்றும் சிகாகோவின் கலைப் பள்ளி ஆகியவற்றில் படித்தார், தற்போது, அவரது படைப்புகள் தற்போது உலகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஜான்சன் ஓவியம் மற்றும் புகைப்படம் உட்பட பல்வேறு ஊடகங்களில் கலை படைப...