Posts

’சிகப்புக் கண்ணாடி’ நிகழ்த்துப்பிரதியின் பரிமாணம் கூட்டிய ஒளி வடிவம்

Image
  ’சிகப்புக் கண்ணாடி’ நிகழ்த்துப்பிரதியின் பரிமாணம் கூட்டிய ஒளி வடிவம்       மேடையேற்றப்படும் நாடக நிகழ்வானது அப்பிரதியின் சாரம் கெடாமல் பார்வையாளர்களிடத்தே கடத்த மிக முக்கியக் காரணிகளாக நடிக உடல்கள் ஒருபுறமும் அதன் இயங்கு நிலைகளை காட்சி அனுபவமாக்கும் ஒளி, ஒலி வடிவமும் செயலாற்றுகின்றன. அவ்வகையில் என்னைப் போன்று ஓவியப் பரப்பிலிருந்து   நாடக நிகழ்வுகளைக் கண்டு, அதன்பால் ஈர்க்கப்பட்டு நாடகத்தையே தொழிலாய் கொண்ட கலை மனம் எப்போதும் காட்சி சார்ந்தே இயங்கும். அதற்காக, நடிகர்களின் மன உடல்கள், காட்சியமைப்பு மற்றும் அரங்கப் பொருட்கள் போன்றவற்றை எழுதும் நாடகப்பிரதியிலேயே அதன் மேல் ஒளி எங்கிருந்து, என்ன வண்ணத்தில் வருகிறது என்பதையெல்லாம்   எப்போதுமே எழுதிக்கொண்டுப் போகிறது என் படைப்பு குணம். அதற்குப்பின் அந்த மேடைக் குறிப்புகளும் ஆன அந்த நாடகப்பிரதியை நிகழ்த்துப் பிரதியாக பார்வையாளர்களிடத்தே பரிமாற என்னைப் போன்ற படைப்பாக்க மனநிலையைக் கொண்ட நடிகர்களையும் சக வடிவமைப்பாளர்களை உடன் சேர்க்க வேண்டிய இடம் சேர வேண்டியிருக்கிறது.   அந்த இடம்தான் நாடகப் படைப்...

ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் கறுப்பு நடிகர் ஐரா ஃபிரடெரிக் ஆல்ட்ரிட்ஜ் (Ira Frederick Alridge -1807 - 1867) - ஞா.கோபி

Image
ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் கறுப்பு நடிகர் ஐரா ஃபிரடெரிக் ஆல்ட்ரிட்ஜ் ( Ira Frederick Alridge - 1807 - 1867 )  “உண்மையான உணர்வையும் நியாயமான வெளிப்பாட்டையும், எந்த காலத்தின் அடிப்படையிலும், சாதி அல்லது நிறத்தின் அடிப்படையினாலும் மட்டுப்படுத்த முடியாது.”      1800 களின் மிக முக்கியமான நாடக நடிகர், நாடக ஆசிரியர் மற்றும் நாடக மேலாளர் என அறியப்பட்ட, ஐரா ஃபிரடெரிக் ஆல்ட்ரிட்ஜ், ஜூலை 24, 1807 ல் ஆப்பிரிக்க குழந்தையாக அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். ஐரா ஃபிரடெரிக் ஆல்ட்ரிட்ஜ் பிறந்த 1807 ஆம் ஆண்டில்தான் பிரிட்டிஷ் அரசின் “அடிமை வர்த்தகச் சட்டம்” மற்றும் “அடிமை வணிகம்” ஒழிக்கப்பட்டது. என்றாலும், கிழக்கிந்திய கம்பெனியால் ஆளப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் 1838 வரை அச்சட்டம் தளர்த்தப்படவில்லை. அக்காலத்தின் முரண் என்னவெனில், அடிமைகளை விட அடிமை உரிமையாளர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது என்பதுவே. இதன் காரணமாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வர்த்தகத்தைத் தொடர்ந்து சட்டவிரோத செயல்பாடாகவே அரசு அதிகாரம் கருதியது.  இத்தகைய கண்காணிப்பு வளையத்தின்...

எளியோர் வலிகளை நாடகப் படிமமாக்கிய ரத்தன் தியாம் – 1948 – 2025

Image
  ஞா. கோபி, நாடகவியலாளர்.   எளியோர் வலிகளை நாடகப் படிமமாக்கிய ரத்தன் தியாம் – 1948 – 2025     1980 களிலிருந்து இந்திய நாடகத்தை தனது வட்டாரம் சார்ந்த வாழ்வியல் சடங்குகளின் அழகியல் மற்றும் உடல்மொழிகள் மூலம், சமகால படைப்புகளாய் உருவாக்கம் செய்து உலகப் பார்வையாளர்களுக்குக் கொடுத்தவர் நாடக இயக்குநர் ரத்தன் தியாம்.   மணிப்பூரின் கோரஸ் ரெபர்ட்டரி தியேட்டரின் நிறுவனரும் இந்திய நாடகங்களில் தவிர்க்கவே முடியாத படைப்பாளி பத்மஸ்ரீ ரத்தன் தியாம். மணிப்பூர் பழங்குடிகள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறை மற்றும் போருக்கு எதிராக தனது காத்திரமான நாடக மொழிகளைக் கொண்டு, தன் வாழ்நாளின் இறுதிவரைப் போராடிய ரத்தன் தியாமுக்கு, தமிழ் நாடகக் கலைஞர்கள் சார்பில் மனமார்ந்த அஞ்சலி.         23 ஜூலை 2025 அன்று, தனது 77 வது வயதில் மறைந்த தியாமிற்கு, இரங்கல் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,   “தியாம், மணிப்பூர் நாடகத்தை உலக வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்த ஒரு உண்மையான ஜாம்பவான்" என...